shadow

நான் தான் பாபர் மசூதியை இடிக்க சொன்னேன். முன்னாள் எம்பி திடுக்கிடும் தகவல்

அயோத்தியில் உள்ள பாபர் மசூதி இடிப்பு வழக்கில் அத்வானி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடந்து கொண்டிருக்கும் நிலையில் பாபர் மசூதியை அத்வானி இடிக்க சொல்லவில்லை, நான் தான் இடிக்க சொன்னேன் என்று முன்னாள் எம்பி, ராம்விலாஸ் வேதாந்தி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி மசூதி அருகிலிருந்து அதை இடிக்க அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, விஜயராஜே சிந்தியாஆகியோர் உத்தரவிட்டதாக வெளியான தகவல் தவறு என்றும் அந்த மசூதியை இடிக்க கரசேவர்களுக்கு நான் தான் உத்தரவிட்டேன் என்றும் வேதாந்தி தெரிவித்துள்ளார்.

அந்த பரபரப்பான சமயத்தில் கரசேவர்களை கலைந்து செல்லும்படி அத்வானி உள்ளிட்டோர், தொண்டர்களுக்கு அறிவுறுத்தியதாகவும் வேதாந்தி தெரிவித்துள்ளார். வேதாந்தியின் இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply