shadow

பிக்பாஸ்: ரூ.10 கோடி கொடுத்து அழைத்தும் மறுத்துவிட்டேன்

கமல்ஹாசன் நடத்தி வரும் ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்தே விறுவிறுப்பு இல்லாமல் நாடகம் போல் சென்று கொண்டிருப்பதால் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை

இந்த நிகழ்ச்சியின் தோல்விக்கு பங்கேற்பாளர்கள் பெரிய அளவில் பிரபலம் இல்லாதவர்கள் என்பதும் ஒரு குற்றச்சாட்டாக எழுந்துள்ளது. சினிமாவில் வாய்ப்பு இல்லாதவர்களே பெரும்பாலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இயக்குனரும் குணசித்திர நடிகையுமான லட்சுமிராமகிருஷ்ணன் ‘தன்னை பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குகொள்ள விஜய் டிவி அழைப்பு விடுத்ததாகவும், ஆனால் ரூ.10 கோடி கொடுத்தாலும் அந்த நிகழ்ச்சியில் தன்னால் கலந்து கொள்ள முடியாது என்று தான் மறுத்துவிட்டதாகவும் தெரிவித்தார். தன்னால் 100 நாட்கள் குடும்பத்தினர்களை விட்டுவிட்டு தனியாக இருக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்

Leave a Reply