‘பாகுபலி’ போன்ற படத்தை எடுக்க என்னிடம் ரூ.200 கோடி இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான்
தேசிய விருது, ஆஸ்கார் விருது உள்பட இசையுலகில் பல்வேறு சாதனைகள் புரிந்த ஏ.ஆர்.ரஹ்மான், தற்போது இசை சம்பந்தப்பட்ட திரைப்படம் ஒன்றை இயக்கியுள்ளார். ‘Le Mast’ என்ற டைட்டிலில் உருவாகியுள்ள இந்த படம் வெகுவிரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் ‘பாகுபலி’ போன்ற பிரமாண்ட படத்தை இயக்குவீர்களா? என்று ஏ.ஆர்.ரஹ்மானிடம் கேள்வி கேட்ட போது அதற்கு அவர் கூறியதாவது: ”பாகுபலி போன்றொரு பிரம்மாண்ட திரைப்படத்தை உருவாக்க, நம்மிடம் நிறைய இயக்குனர்கள் இருக்கிறார்கள். அவர்களே அதைச் செய்யட்டும். அதுமட்டுமின்றி என்னிடம் 200 கோடி ரூபாய் இல்லை. நான் இசையை, அழகை, காட்சிகளை உருவாக்க விரும்புகிறேன். மக்கள் வெளிவர விரும்பாத அளவுக்கான ஒரு உலகத்தை நான் உருவாக்க விரும்புகிறேன். கதையில் வரும் எதிர்மறை காட்சிகளைக்கூட கவித்துவமாகவே நான் எடுத்துரைக்க விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இயக்கும் அடுத்தடுத்த படங்களும் இசை சம்பந்தப்பட்ட படங்களாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
Leave a Reply
You must be logged in to post a comment.