shadow

அஜீத் படத்தில் வாய்ப்பு கிடைத்தால் சம்பளமே வேண்டாம். ஆண்ட்ரியா
andrea
கெளதம் மேனன் இயக்கிய ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் அறிமுகமான நடிகை ஆண்ட்ரியா, அதன் பின்னர் விஸ்வரூபம், ஆயிரத்தில் ஒருவன், அரண்மனை, ஆம்பள, வலியவன், உத்தமவில்லன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் ஜீ தொலைக்காட்சியில் குஷ்பு நடத்தி வரும் ‘சிம்ப்ளி குஷ்பு’ நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியா கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் குஷ்பு கேட்ட கேள்விகளுக்கு சுவாரஸியமாக பதிலளித்த ஆண்ட்ரியா, ‘யார் படத்தில் கதையே கேட்காமல் சம்பளம் பற்றி பேசாமல் நடிப்பீர்கள் என்ற கேள்விக்கு உடனே கொஞ்சம் கூட யோசிக்காமல் ‘அஜீத்’ என்று ஆண்ட்ரியா பதிலளித்தார்.

மேலும் தற்போது ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி போன்ற இசையமைப்பாளர்கள் எல்லாம் நடிகர்களாக மாறி வரும் நிலையில், எந்த இசையமைப்பாளருடன் நடிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்விக்கு ‘ஏ.ஆர்.ரஹ்மான்’ என்று ஆண்ட்ரியா பதிலளித்துள்ளார்.

மேலும் தனக்கு வரும் கணவர் உண்மையானவராக இருக்க வேண்டும். பொய் சொல்லக் கூடாது. என்னைத் தவிர வேறு எந்த பெண்ணையும் பார்க்க கூடாது என்றும் அவர் அந்த பேட்டியில் கூறினார்.
 

Leave a Reply