ரஜினிக்கு ஜோடியாக நடித்ததை இன்னும் என்னால் நம்பமுடியவில்லை: ஈஸ்வரிராவ்

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ஜோடி சேர முன்னணி நடிகைகளே தவமாய் தவமிருந்து வரும் நிலையில் அப்படியொரு வாய்ப்பு நடிகை ஈஸ்வரிராவுக்கு கிடைத்துள்ளது. இதுகுறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியதாவது:

‘காலா’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க வாய்ப்பு கிடைத்ததை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. ரஜினியுடன் நடிக்க வேண்டும் என்று முன்னணி கதாநாயகிகள் எல்லோரும் காத்துக்கொண்டிருக்க எனக்கு அந்த வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. ரஞ்சித் அழைத்து தேர்வு வைத்தார். ஆனால் ரஜினி படம் என்பதை மட்டும் ரகசியமாக வைத்திருந்தார். என்னுடைய காட்சிகள் பெரும்பாலும் தாராவியில் படமாக்கப்பட்டன.

படத்தில் நான் நிறைய நகை அணிந்து இருப்பேன். 25 ஆண்டுகளாக சினிமாவில் இருந்தாலும் நான் யாரிடமும் சென்று வாய்ப்பு கேட்டது இல்லை. காலா படத்திற்கு பிறகும் இதுவரை எந்த படமும் ஒப்பந்தமாகவில்லை. நல்ல வேடங்களுக்காக காத்திருக்கிறேன்’ என்று ஈஸ்வரிராவ் கூறியுள்ளார்.

Leave a Reply