shadow

Vijay-Ajith07விஜய் மற்றும் அஜீத் நடித்த ஒரே படம் ‘ராஜாவின் பார்வையிலே”. கடந்த 1995ஆம் ஆண்டு ரிலீஸான இந்த படத்தை ஜானகி செளந்தர் இயக்கியிருந்தார்.இளையராஜாவின் இசையில் உருவான இந்த படத்தில் வடிவேலு ஒரு பாடலையும் பாடியிருப்பார்.

இந்த படத்தில் நடித்த நடிகை காயத்ரி அஜீத், மற்றும் விஜய் இருவருடனும் சேர்ந்து நடித்ததை சமீபத்தில் நினைவு கூர்ந்தார்.  “விஜய் மற்றும் அஜீத் இருவரும் அந்த காலகட்டத்தில் ஆரம்ப நிலையில் உள்ள நடிகர்களாக இருந்தனர். விஜய் அப்போது கூச்ச சுபாவத்துடன் யாருடனும் அதிகம் பேசாமல் இருப்பார். ஆனால் அஜீத் எல்லோரிடமும் வெளிப்படையாக பேசுவார். இருவருடன் நான் நடிக்கும்போது அவர்கள் தான் தமிழகத்தின் முக்கிய நடிகர்களாக மாறுவார்கள் என்பதை நான் நினைத்துகூட பார்க்கவில்லை.

தற்போது தொலைக்காட்சி சீரியல்களில் நடித்து வரும் காயத்ரி,  மெட்டி ஒலி சரோ என்று அன்புடன் அழைக்கப்பட்டு வருகிறார். மீண்டும் இருவரும் இணைந்து நடிப்பது குறித்த தகவல்கள் வெளியாவது குறித்து காயத்ரி கூறும்போது, “இருவரும் மீண்டும் இணைந்து நடித்தால் கண்டிப்பாக வலியசென்று எனக்கு ஒரு முக்கிய கேரக்டர் கேட்பேன். அதற்கு எனக்கு உரிமை இருக்கிறது. மீண்டும் இருவரும் இணைந்து நடித்தால் அதைவிட வேறு மகிழ்ச்சி எனக்கு இல்லை என்று கூறினார்.

Leave a Reply