விஷால் படத்தில் நடிக்கவில்லை. சிம்பு நாயகி மறுப்பு
சிம்பு நடித்த ‘அச்சம் என்பது மடமையடா’ படத்தின் நாயகி மஞ்சிமா மோகன், விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கவுள்ள ‘சண்டக்கோழி 2’ படத்தில் நடிக்கவுள்ளதாகவும் இதுகுறித்த ஒப்பந்தம் கையெழுத்தாகிவிட்டதாகவும் செய்திகள் வெளிவந்த நிலையில் இந்த செய்தியை மஞ்சிமா மோகன் தற்போது மறுத்துள்ளார்.
‘சண்டக்கோழி 2ஆம் பாகத்தில் படத்தில் நடிக்க என்னிடம் யாரும் பேச்சுவார்த்தை நடத்தவில்லை இந்த படத்தில் நான் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படும் தகவல் முற்றிலும் வதந்தி என்றும் மஞ்சிமா மோகன் ஆங்கில பத்திரிகை ஒன்றின் பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மேலும் தற்போது சிம்புவுடன் ‘அச்சம் என்பது மடமையடா’, விக்ரம்பிரபுவுடன் பெயர் வைக்கப்படாத படம் ஆகிய இரண்டு தமிழ் படங்களில் மட்டுமே நடித்து வருவதாகவும் வேறு எந்த படத்திலும் கமிட் ஆகவில்லை என்றும் உறுதி செய்துள்ளார்.
மஞ்சிமா மோகனின் விளக்கத்தால் ‘சண்டக்கோழி 2’ படத்தின் நாயகி யார் என்பது குறித்த கேள்வி மீண்டும் எழுந்துள்ளது. இந்த படத்தில் முதல் பாகத்தில் நடித்த மீரா ஜாஸ்மின் மற்றும் ராஜ்கிரன் ஆகியோர் முக்கிய கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.