shadow

நான் என்ன அமெரிக்க எம்.பி.யா.? செய்தியாளர்களிடம் எகிறிய தம்பிதுரை

தமிழக விவசாயிகள் டெல்லியில் கடந்த இரண்டு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில் இந்த போராட்டத்தை மத்திய மாநில அரசுகள் கண்டுகொள்வதில்லை என்று ஊடகங்களால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் டெல்லியில் இன்று விவசாயிகளை நேரில் சந்தித்த மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை மற்றும் தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசியபோது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை தமிழக அமைச்சர்கள் சந்தித்து பேசவில்லையே என கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த தம்பிதுரை, கடந்த வாரமே போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை நான் சந்தித்து பேசினேன். தற்போது முதலமைச்சர் உத்தரவின் பேரில் நானும், அமைச்சர் துரைக்கண்ணும் இங்கு வந்துள்ளோம். நான் என்ன அமெரிக்க எம்.பி.யா.? நானும் தமிழக எம்.பி. தான் என்றார். நானும் அமைச்சர் என்ற கேடர் பொறுப்பில் வருபவன்தான் என்றும் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விவசாயிகளின் பிரச்னைகள் குறித்து நானே வலியுறுத்தி உள்ளேன் எனவும் கூறினார்.

Leave a Reply