shadow

மாமனார் என்னை மிரட்டுகிறார். திருச்சி சிவா மருமகள் பரபரப்பு புகார்

திமுக எம்பி திருச்சி சிவா குறித்து அவ்வப்போது பரபரப்பான செய்திகள் வெளியாகி வரும் நிலையில் தற்போது அவர் தன்னுடைய மருமகளை மிரட்டியதாக திடுக்கிடும் குற்றச்சாட்டு ஒன்று எழுந்துள்ளது.

திருச்சி சிவாவின் மகன் மணிவண்ணன் என்ற சூர்யா, பிரதியுஷா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக எம்பி திருச்சி சிவா, மருமகளை மிரட்டியுள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து பிரதியுஷா செய்தியாளர்களிடம் கூறியபோது, ‘நான் தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கின்றேன். ஆனால் அதையும் பொருட்படுத்தாமல் தனியாக வசித்து வரும் எங்களை காவல் அதிகாரிகளின் துணையுடன் திருச்சி சிவா மிரட்டுகிறார்’ என்று
தெரிவித்தார்.

இதற்கு விளக்கமளித்துள்ள திருச்சி சிவா கூறுகையில், ‘எனது மகனைவிட, மருமகளுக்கு கூடுதல் வயதாகிறது. இது எனக்கு மிகவும் கவலை தருகிறது. வயதாகும்போது, எனது மகனை பார்த்துக் கொள்ள ஆளில்லாமல் போய்விடுமோ என்ற அச்சமே எனக்கு வருகிறது. அதனால்தான் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தேன் என திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

Leave a Reply