shadow

trishaதொழிலதிபர் வருண்மணியனுடன் நடிகை த்ரிஷாவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்து அதன்பின்னர் சில காரணங்களால் அது ரத்தானது குறித்து அனைவரும் அறிந்ததே.

தனது திருமணம் ரத்தானது குறித்து நடிகை த்ரிஷா முதல்முறையாக மனம்விட்டு பத்திரிகையாளர்களிடம் கருத்து கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது:

எனது திருமணம் ரத்தானது உண்மைதான். இது எதிர்பாராமல் நடந்த ஒன்று. சில விஷயங்கள் நம்மையும் மீறி நடந்து விடுகின்றன. அதை நாம் ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும். திருமணம் நின்றது பற்றி நான் கவலைப்படவில்லை. அது பற்றியே சிந்தித்துக் கொண்டு இருக்கவும் விரும்பவில்லை. வாழ்க்கையின் அடுத்த கட்டத்துக்கு போக வேண்டும். தற்போது எனது முழு சிந்தனையும் சினிமாவில்தான் இருக்கிறது.

வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களும் கடவுள் விருப்பப்படியே நடக்கின்றன. எனக்கு நல்லா விஷயங்களை பற்றியும் வெளிப்படையாக பேசக்கூடிய குணம் உண்டு. என் வாழ்க்கையில் எது நிகழ்கிறதோ அதை அப்படியே ஏற்றுக் கொள்ள தயாராக இருக்கிறேன். நான் கடவுளின் குழந்தை. கடவுள் என்னை கவனித்துக் கொள்வார்.

இவ்வாறு திரிஷா கூறினார்.

Leave a Reply