ஐபிஎல் கிரிக்கெட் தொடர்: மும்பைக்கு மேலும் ஒரு தோல்வி. ஐதராபாத் அபார வெற்றி
தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்றைய போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை தோற்கடித்தது.
ஐதராபாத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி, மும்பையை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. இதனால் முதலில் களமிறங்கிய மும்பை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 142 ரன்கள் எடுத்தது. ராயுடு 54 ரன்களும், பாண்டியா 49 ரன்களும் எடுத்தனர்.
143 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி, 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 145 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் வார்னர் மிக அபாரமாக விளையாடி 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.
இன்று நடைபெறும் போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றன.
Leave a Reply
You must be logged in to post a comment.