shadow

ஐதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்த மும்பை அணி

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. வெற்றி பெற 119 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்ட முடியாமல் வெறும் 89 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி மும்பை அணி ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தது

டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்துவீச முடிவு செய்ததால் ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்த அணி 18.4 ஓவர்களில் 118 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தததால் மும்பை அணி வெற்றி பெற வெறும் 119 ரன்கள் மட்டுமே என்ற இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

 ஆனால் மும்பை அணியின் கவுல், ரஷித்கான் மற்றும் பசில் ஆகியோர்களின் அதிரடி பந்துவீச்சு, மும்பை அணியை வெறும் 89 ரன்களில் சுருட்டியது. இதனால் மும்பை அணி 89 ரன்களுக்கு ஆட்டமிழந்து 31 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ரஷித்கான் ஆட்டநாயகன் விருதினை வென்றார்

Leave a Reply