shadow

army secretsநிர்வாண வீடியோ மற்றும் நிர்வாண படங்களை பெற்று அதற்கு பதிலாக இந்திய ராணுவ ரகசியங்களை பரிமாறிக்கொண்ட ஐதராபாத் ராணுவ அதிகாரி ஒருவர் நேற்று அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

கடந்த வருடம் சென்னையில் பணிபுரிந்து பின்னர் ஐதராபாத்துக்கு மாற்றலாகி சென்ற பதன்குமார் பொத் தார் நாயக் என்ற 40 வயது ராணுவ அதிகாரி, தினமும் நீண்ட நேரம் அலுவலகத்தில் வேலை செய்ததால் அதிகாரிகள் சந்தேகம் அடைந்தனர். அவருடைய கம்ப்யூட்டரை ஆய்வு செய்தபோது, பேஸ்புக்கில் ஒரு பெண்ணுடன் அவர் தினமும் மணிக்கணக்கில் சாட்டிங்கில் ஈடுபட்டது தெரியவந்தது.

சாட்டிங்கின் மூலம் அவர் இந்திய ராணுவ ரகசியங்களை அனுஷ்கா அகர்வால் என்ற பெண்ணிடம் பகிர்ந்துள்ளார். அதற்கு பதிலாக அந்த பெண் பதன்குமாருக்கு தன்னுடைய நிர்வாண படங்களையும்,வீடியோவையும் அனுப்பியுள்ளார். ஐதராபாத் போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் அனுஷ்கா சர்மா, பாகிஸ்தானை சேர்ந்த ஐ.எஸ்.ஐ ஏஜண்ட் என்பது தெரியவந்தது.

இதையடுத்து பதன் குமாரை ஐதராபாத் வடக்கு மண்டல அதிரடி படை போலீசார் நேற்று கைது செய்தனர். அவர் மீது தேசதுரோக வழக்குபதிவு செய்யப்பட்டது. கைதான பதன் குமார் ஐதராபாத் நாம்பள்ளி முதன்மை மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். 20-ந் தேதி வரை நீதிமன்ற காவலாக  சஞ்சல குடா சிறையில் அடைக்கப்பட்டார்.

Leave a Reply