shadow

இறுதிச்சடங்கிற்கு பணமில்லை. மனைவியின் பிணத்துடன் வங்கி வாசலில் கணவர்

wife-deathரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல்வேறு இன்னல்களை மக்கள் அனுபவித்து வருகின்றனர். இந்த அறிவிப்பால் சுமார் 50 பேர்களுக்கும் மேல் மரணம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில் வங்கியில் பணம் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டதால் இறந்த மனைவியின் சடலத்துடன் கணவர் ஒருவர் வங்கி வாசலில் பரிதாபமாக உட்கார்ந்தது காண்போரை கண்ணீரை வரவழைத்தது.

நொய்டாவை சேர்ந்த லால் என்பவரின் மனைவி சமீபத்தில் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்டார். மனைவியின் இறுதிச்சடங்கிற்கு பணம் இல்லாததால் லால், வங்கியில் தனது அக்கவுண்டில் உள்ள பணத்தை எடுக்க வந்தார். ஆனால் வங்கியில் பணம் இல்லாததால் வங்கி அதிகாரிகள் அவருக்கு பணம் தரவில்லை.

இதனால் வங்கி வாசலில் மனைவி பிணத்துடன் லால் உட்கார்ந்து போராட்டம் நடத்தினர். இதுகுறித்த தகவல் அறிந்ததும் உள்ளூர் பிரமுகர் ஒருவர் வந்து உடனடியாக பணத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply