shadow

பங்குச்சந்தையால் பலியான கணவன். மனைவியே அடித்து கொலை செய்த கொடூரம்

share-marketபங்குச்சந்தையில் லட்சக்கணக்கில் நஷ்டம் அடைந்த கணவனை மனைவியே அடித்து கொலை செய்த சம்பவம் சேலம் பகுதியில் நடந்துள்ளது.

சேலம் மாவட்டம், சூரமங்கலம் அருகே உள்ள வெள்ளக்கல்பட்டியை என்ற பகுதியை சேர்ந்த 50 வயது சதாசிவம் என்பவருக்கு தங்கம் என்ற மனைவியும் ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

இவர்களது வாழ்க்கை சுமூகமாக போய்க்கொண்டிருந்த போது திடீரென சதாசிவம் பங்குச்சந்தையில் காலடி எடுத்து வைத்துள்ளார். லட்சக்கணக்கில் பங்குச்சந்தையில் பணம் கொட்டும் என்று எதிர்பார்த்த சதாசிவத்திற்கு லட்சக்கணக்கில் நஷ்டம்தான் வந்தது.

இதனால் அவருக்கும் அவரது மனைவி தங்கத்தும் அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு சதாசிவம் – தங்கம் இடையே வாக்குவாதம் நடந்ததாகவும் இந்த வாக்குவாதம் முற்றி சதாசிவத்தை அவரது மனைவி அடித்து கொலை செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தங்கத்திடம் போலீஸார் விசாரணை செய்தபோது, “என் கணவர் நான் கூறியதை கேட்காமல் ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்திருந்தார். இந்நிலையில் அவருக்கு லட்சகணக்கில் நஷ்டம் ஏற்பட்டது. இதை தட்டி கேட்ட என்னை அடிக்க வந்தார். நான் தற்காப்பிற்காக அவரை தள்ளி விட்டேன். அப்போது அவர் தலையில் அடிபட்டு இறந்து விட்டார்.” என்று கூறினார். இதனையடுத்து தங்கத்தை கைது செய்த போலீஸார் மேலும் அவரிடம் விசாரணை செய்து வருகின்றனர்.

Leave a Reply