shadow

அதிமுகவின் உண்ணாவிரத போராட்ட தேதி திடீர் மாற்றம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க தவறியதை அடுத்து மத்திய அரசை கண்டித்து ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் நடத்தப்படும் என்று துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று அறிவித்திருந்தார்.

ஆனால் இந்த அறிவிப்பு வெளீயான சில மணி நேரங்களில் இந்த உண்ணாவிரத போராட்டம் ஏப்ரல் 2ஆம் தேதிக்கு பதில் ஏப்ரல் 3ஆம் தேதி நடைபெறும் என்று அதிமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரையில் போராட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த தேதி மாற்றம் ஏன் என்பது குறித்த விளக்கம் எதுவும் அதிமுக தரப்பில் இருந்து அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

 

Hunger strike protest date changed by admk

Leave a Reply