shadow

பிரதமரின் ‘தூய்மை இந்தியா’ பணியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி.

irani

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேற்று சமூக சேவை அமைப்புடன் சேர்ந்து தூய்மை இந்தியா திட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் பள்ளி மாணவ மாணவியர்களும் குப்பைகளை அகற்றி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

பாரத பிரதமரின் தூய்மை இந்தியா திட்டத்தில் பல்வேறு வி.ஐ.பிக்கள் ஈடுபட்டு வரும் நிலையில் நேற்று டெல்லியின் வடபகுதியில் உள்ள திமாபூர் என்ற இடத்தில் சமூக சேவை அமைப்புகளுடன் சேர்ந்து கொண்டு அந்த பகுதியில் இருந்த குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டார். அமைச்சரின் தூய்மைப்படுத்தும் பணியினை கேள்விப்பட்ட அருகில் இருந்த பள்ளி மாணவர்களும் அவருடன் இணைந்து தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். மாணவர்களுக்கு அமைச்சர் தனது நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

தூய்மைப்படுத்தும் பணி முடிந்தவுடன் மாணவர்களுடன் அவர்களுடைய பள்ளிக்கு சென்று அங்குள்ளவர்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Leave a Reply