மதுரை நபருக்கு எப்படி வந்தது கொரோனா? மருத்துவர்களுக்கே புரியாத மர்மம்!
தமிழகத்தில் ஏற்கனவே 9 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி மதுரையில் உள்ள 54 வயது நபர் ஒருவருக்கு கொரோனா இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது
இந்த நபர் வெளிநாட்டிற்கோ, வெளி மாநிலத்திற்கோ செல்லவில்லை. வெளிநாட்டவர் யாருடனும் தொடர்பும் இல்லை. இருப்பினும் இவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
தமிழகத்தில் முதல்முறையாக உள்ளூரிலேயே இருக்கும் ஒருவருக்கு கொரோனா நோய்த்தொற்று பரவியிருப்பது மருத்துவர்களுக்கே புரியாத மர்மமாக உள்ளதாக கூறப்படுகிறது. எனவே வெளிநாட்டில் இருந்து வந்தவர்களிடம் இருந்து மட்டுமின்றி உள்ளூரில் இருப்பவர்களுக்கும் எதன் மூலமாவது கொரோனா பரவும் என்பது இந்த நோயாளி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.