அரவிந்த் கெஜ்ரிவால் மீதான கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டேன். அண்ணா ஹசாரே
ஒருகாலத்தில் சமூக சேவகர் அண்ணா ஹசாராவின் சீடராக இருந்த டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சில வருடங்களுக்கு முன் அவருடன் கருத்துவேறுபாடு கொண்டார். அப்பொழுது முதல் அரவிந்த் கெஜ்ரிவாலை அவ்வப்போது அண்ணா ஹசாரே விமர்சித்து வந்த நிலையில் தற்போது அவர் மீதான கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டதாக அண்ணா ஹசாரே மிகவும் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலின் அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த ஒருவர் கைது செய்யப்பட்டிருப்பதும், மற்றொருவர் மீது மோசடி புகார் கூறப்பட்டிருப்பதும் கவலையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அண்ணா ஹசாரே, ‘என்னுடன் அரவிந்த் கேஜ்ரிவால் இருந்த போது, கிராம சுயராஜ்யம் என்ற புத்தகத்தை எழுதினார். ஆனால் இதுதான் கிராம சுயராஜ்யமா? இந்த விஷயம் தன்னை கவலை அடையச் செய்துள்ளதாகவும், அவர் மீதான தனது கடைசி நம்பிக்கையையும் இழந்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.
ஆம் ஆத்மி எம்எல்ஏ சந்தீப் குமார் மீது பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவத்தை அடுத்து அண்ணா ஹசாரே இந்த கருத்தைத் தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.