shadow

AmmaPharmacy5714சென்னை உள்பட மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் கடந்த ஜூன் மாதம் 27ஆம் தேதி ‘அம்மா மருந்தகம்’ ஆரம்பிக்கப்பட்டது. இந்த மருந்தகத்தில் அனைத்து மருந்துகளும் 10% விலை குறைவாக கிடைக்கின்றது. இதனால் வாடிக்கையாக ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி போன்ற வியாதிகளுக்கு ஆயிரக்கணக்கில் மாதந்தோறும் மருந்துகள் வாங்கும் நோயாளிகள் பயன்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையில் உள்ள நங்காநல்லூர் அம்மா மருந்தகத்தில் போன் செய்தால் போதும் வீட்டுக்கே மருந்துகளை டெலிவரி செய்யும் முறை ஒன்று ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த வசதி தற்போதைக்கு முதியோர்களுக்கு மட்டும் வழங்கப்படவுள்ளது. எதிர்காலத்தில் இந்த வசதி அனைத்து மக்களுக்கும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து அம்மா மருந்தக அதிகாரி ஒருவர் கூறும்போது, “சில முதியவர்கள் ரெகுலராக அம்மா மருந்தகத்திற்கு வந்து சர்க்கரை வியாதிகளுக்கு மருந்து வாங்கி செல்கின்றனர். அவர்களின் வசதிக்காக நங்காநல்லூர் பகுதியில் வசிக்கும் முதியவர்களுக்கு மட்டும் டோர் டெலிவரி செய்ய தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு கூடுதலாக எவ்வித கட்டணமும் வசூலிக்கப்படமாட்டாது. இந்த வசதிக்கு கிடைக்கும் ஆதரவை பொறுத்து அனைவருக்கும் டோர் டெலிவரி செய்யும் வசதி விரிவுபடுத்தப்படும் என்று கூறியுள்ளார். இந்த டோர் டெலிவரி வசதியின் காரணமாக முதியவர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Leave a Reply