shadow

நீட் தேர்வு: எழுதியவர்களை விட பாஸ் ஆனவர்கள் அதிகம் உள்ளது எப்படி?

2018ம் ஆண்டுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் கடந்த மே மாதம் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மருத்துவ கலந்தாய்வு பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கு மொழி பெயா்க்கப்பட்ட நீட் வினாத்தாளின் 49 கேள்விகளில் பிழை உள்ளது. இதனால் தமிழிழ் நீட் தோ்வு எழுதியவா்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தவறாக கேட்கப்பட்ட ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வழங்க வேண்டும் என்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. டி.கே.ரங்கராஜன் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடா்ந்திருந்தாா்.

இந்த வழக்கின் மீது இன்று விசாரணை நடைபெற்றது. விசாரணையின் போது நீதிபதிகள் சில கேள்விகளை முன்வைத்துள்ளனா். அதன்படி பிகாா் மாநிலத்தில் தோ்வெழுதிய மாணவா்களை காட்டிலும் அதிகப்படியான மாணவா்கள் வெற்றி பெற்றிருப்பது பெற்றது எப்படி? மேலும் நீட் தோ்வு தொடா்பாக வழக்கு தொடரப்பட்டிருந்த தருணத்தில் தோ்வு முடிவுகளை அறிவிக்கப்பட்டதற்கு முன்னதாகவே வெளியிட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பிய நீதிபதிகள், நீட் தோ்வு விவகாரத்தில் சி.பி.எஸ்.இ. சா்வாதிகார போக்குடன் செயல்படுவதாக கண்டனம் தொிவித்துள்ளனா்.

மேலும் வழக்கு நடைபெற்று வருவதால் மருத்துவ கலந்தாய்விற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரப்பட்டது. இதற்கு பதில் அளித்த நீதிபதிகள், மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றாலும், வழக்கின் தீா்ப்புக்கு கட்டுப்படும் என்று தொிவித்து வழக்கை ஒத்தி வைத்துள்ளனா்.

Leave a Reply