shadow

13Fir09.qxpதிரைப்படங்களை முழுவதும் பார்க்காமல் அவசரக்கோலத்தில் விருதுகள் அறிவிக்கப்பட்டதாக கூறி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், கேரள உயர்நீதிமன்றம் பாரதிராஜா, நடிகை ஜலஜா உள்பட தேர்வுக்குழுவினர் 10 பேர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஏப்ரல் 18ஆம் தேதி, 2013ஆம் ஆண்டுக்கான கேரள திரைப்பட விருதுகள்  தேர்வுக்குழுவின் உறுப்பினர்களால் அறிவிக்கப்பட்டது. கேரள சினிமா துறை மந்திரி திருவஞ்சூர் ராதாகிருஷ்ணன் இந்த விருதுகளை அறிவித்தார்.

சென்றா ஆண்டின் சிறந்த திரைப்படமாக சுதேவன் இயக்கிய ‘சி.ஆர்.நம்பர் 89’ என்ற திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த நடிகர்களாக பகத் பாசில், லால் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிறந்த நடிகையாக ஆன் அகஸ்டின் தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில், பேரறியாதவர் என்ற படத்தின் தயாரிப்பாளர் அனில் குமார் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒர் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் “விருதுக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 85 திரைப்படங்களையும் தேர்வுக்குழு தலைவராக இருந்த பாரதிராஜா மற்றும் தேர்வுக்குழு உறுப்பினர்கள், முழுமையாக பார்க்காமல் அவசர கோலத்தில் சிறந்த படங்களையும், நடிகர்-நடிகைகளையும் தேர்வு செய்துள்ளனர். எனவே, அதனை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட  நீதிபதி முஸ்தாக் அகம்மது, தேர்வுக்குழு தலைவர் பாரதிராஜா, நடிகை ஜலஜா உள்பட 7 உறுப்பினர்கள் மற்றும் கேரள திரைப்பட அகாடமியின் தலைவர் பிரியதர்ஷன், செயலாளர் எஸ்.ராஜேந்திரன்நாயர், கலாசார துறை செயலாளர் ஆகியோருக்கு 10 நாட்களில் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.

Leave a Reply