மனைவியுடன் நூலிழையில் உயிர் பிழைத்த வங்கதேச கிரிக்கெட் வீரர்
வங்க தேசத்தின் கிரிக்கெட் வீரர் தனது மனைவியுடன் ஹெலிகாப்டரில் சென்றபோது நூலிழையில் உயிர்தப்பிய சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வங்கதேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் வீரருமான சகீப்-அல்-ஹசன் நேற்று தனது மனைவியுடன் தொலைக்காட்சி படப்பிடிப்பு ஒன்றுக்காக ஹெலிகாப்டரில் சென்றார். காக்ஸ்பஜார் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் சகீப்பும், அவரது மனைவியும் இறங்கி கொண்டபின்னர் ஹெலிகாப்டர் மீண்டும் கிளம்பியது. ஆனால் கிளம்பிய ஒருசில நொடியில் விபத்துக்குள்ளாகி அதில் இருந்த ஒருவர் பலியானார். 4 பேர் காயம் அடைந்தனர்.
சகீப்-அல்-ஹசன் தரை இறங்கிய இடத்தில் இருந்து சுமார் 1½ கிலோ மீட்டர் தூரத்தில் தான் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இதனால் அவர் மனைவியுடன் மயிரிழையில் உயிர் தப்பினார். இதுகுறித்து சகீப்-அல்-ஹசன் கூறும்போது, “நான் நலமாக இருக்கிறேன். ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது தனக்கு மிகுந்த அதிர்ச்சி அளித்தது. விபத்து தொடர்பாக தன்னால் எதுவும் பேச முடியவில்லை” என்றார்.
Leave a Reply
You must be logged in to post a comment.