தொடரும் கனமழை: இன்று பள்ளி விடுமுறை குறித்த அறிவிப்பு
நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்யும் என ஏற்கனவே சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்த தகவலை ஃபேஸ்புக்கில் தமிழ்நாடு வெதர்மேன் அவர்களும் உறுதி செய்திருந்தார்
எனவே இன்று முதல் 3 நாட்களுக்கு சென்னை உள்பட சென்னையை சுற்றி உள்ள மாவட்டங்களான காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும், அதேபோல் டெல்டா மாவட்டங்களில் நல்ல மழை பெய்யும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது
வானிலை ஆய்வு மையம் கூறியபடியே தற்போது சென்னையிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் உள்ள மாவட்டங்களில் நல்ல மழை பெய்து வருகிறது
இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்
இன்னும் ஒரு சில நிமிடங்களில் இதேபோல் மேலும் ஒரு சில மாவட்டங்களில் இருந்து விடுமுறை அறிவிப்பு வரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது
Leave a Reply
You must be logged in to post a comment.