shadow

தமிழகத்தில் இன்றும் நாளையும் பெரும்பாலான பகுதிகளில் கன மழையும் நாளை மறுநாள் மற்றும் ஆகஸ்ட் 31-ஆம் தேதி மிதமான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

ஆகஸ்ட் 28ஆம் தேதி தேனி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் இடி மின்னலுடன் கன மழை பெய்யும் என்று சேலம், திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் புதுவை, காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

ஆகஸ்ட் 29ஆம் தேதி தென்காசி, மதுரை, திண்டுக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

ஆகஸ்ட் 30ஆம் தேதி நீலகிரி, கோவை மற்றும் புதுவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும்.

ஆகஸ்ட் 31ஆம் தேதி கடலோர மாவட்டங்கள் மற்றும் அதை ஒட்டிய உள் மாவட்டங்கள் புதுவை, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மழை பெய்யும்.