shadow

பலாத்காரம் செய்ய வந்த வாலிபரின் நாக்கை கடித்து துப்பிய கேரள இளம்பெண்

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரளாவில் சட்டக்கல்லூரி மாணவி ஒருவர், தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 52 வயதான சாமியாரின் ஆணுறுப்பை வெட்டியதாக வெளிவந்த செய்தியை அடுத்து தற்போது அதே கேரளாவில் பாலியல் பலாத்காரம் செய்ய வந்த ஒருவரின் நாகை கடித்து துப்பிய பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் கொச்சியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நேற்று காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் தன்னை ஒரு நபர் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்ததாகவும், அந்த நேரத்தில் தான் அந்த நபரின் நாக்கை கடித்துவிட்டதாகவும் கூறி துண்டிக்கப்பட்ட நாக்கையும் கையோடு போலீசாரிடம் காண்பித்துள்ளார்.

இதனால் உடனே பரபரப்பு அடைந்த போலிசார், நகரில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் நாக்கு துண்டான நபர் சிகிச்சை பெறுகிறாரா என்று விசாரித்தனர். இந்த நிலையில் ஒரு தனியார் மருத்துவமனையில் நாக்கு அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருப்பது தெரிந்தது. பைக் விபத்து காரணமாக தனது நாக்கில் காயம் ஏற்பட்டதாக டாக்டர்களிடம் கூறி அந்த நபர் சிகிச்சை பெற்றதும் தெரிய வந்தது. அறுவை சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட அந்த நபரை போலீஸார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோன்ற குற்றச்சாட்டுக்காக ஏற்கெனவே ஒருவாரம் நீதிமன்றக் காவலில் அந்த நபர் இருந்தார் என்று போலீஸார் தெரிவித்தனர்.

Leave a Reply