shadow

தினகரனின் ஹவாலா ஏஜெண்ட் அதிரடி கைது! இனி தினகரன் அவ்வளவுதானா?

இரட்டை இலை சின்னத்திற்காக லஞ்சம் கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட தினகரன் சென்னைக்கு அழைத்து வரப்பட்டு அவரிடம் மேலும் தீவிர விசாரணை நடந்து வருகிறது. மேலும் அவரது தோழி லைனாவிடமும், இன்னும் சிலரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் என்பவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். இவருக்கும் தினகரனுக்கு ஹவாலா தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து அவரிடம் நடத்தப்படும் விசாரணையில் உறுதி செய்யப்படும் என்றும் டெல்லி போலிசாரிடம் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது

இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக சுகேஷிடம் தினகரன் கொடுத்தது ஹவாலா பணம் என்று ஏற்கனவே விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து தற்போது ஹவாலா ஏஜெண்ட் நரேஷ் கைது செய்யப்பட்டிருப்பது இந்த வழக்கிற்கு மேலும் வலு சேர்த்துள்ளதாக போலீசார் கருதுகின்ற்னர்.

தினகரனின் வழக்கு நாளுக்கு நாள் வலுவாகி வருவதால் இனி தினகரனின் அரசியல் வாழ்க்கையும், இயல்பு வாழ்க்கையும் அவ்வளவுதான் என அரசியல்விமர்சகர்கள் தொலைக்காட்சி விவாதங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply