முதல்வருக்கே குடியுரிமைக்கான ஆவணங்கள் இல்லையா? அதிர்ச்சித்தகவல்

அரியானா மாநில முதல்வருக்கு குடியுரிமைக்கான ஆவணங்கள் எதுவும் இல்லை என அம்மாநில தலைமைச் செயலகம் பதிலளித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

பானிபட் என்ற பகுதியை சேர்ந்த கபீர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதில் அரியானா மாநில முதல் அமைச்சர் உள்பட மற்ற அமைச்சர்களின் குடியுரிமைக்கான சான்றிதழ் கோரி அவர் கேட்டிருந்தார்

இதற்கு பதிலளித்துள்ள தலைமைச் செயலகம் முதலமைச்சர் உட்பட அமைச்சர்களின் குடியுரிமைக்கான சான்றிதழ் தலைமைச் செயலகத்தில் இல்லை என்றும் இந்த ஆவணங்கள் ஒருவேளை தேர்தல் ஆணையத்தில் இருக்கலாம் என்றும் அதனால் அங்கு தொடர்பு கொள்ளவும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது

முதலமைச்சருக்கான குடியுரிமை சான்றிதழ் தலைமைச் செயலகத்தில் இல்லை என்ற தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply