தெலுங்கில் நாகசைதன்யா-ஹன்சிகா நடிக்கும் துர்கா என்னும் திரைப்படம் உருவாகி வருகிறது., முதன்முதலாக நாகசைதன்யா இருவேடங்களில் நடிக்கும் இந்த படத்தில் ஹன்சிகாவுக்கு ஆக்ஷன் காட்சிகளும் இருக்கின்றதாம். இந்த படத்திற்காக ஹன்சிகா குதிரையில் ஏறி வில்லன்களிடம் இருந்து தப்பிப்பது போன்ற ஒரு காட்சி.

ஹன்சிகாவுக்கு குதிரை சவாரி செய்து பழக்கம் இல்லாததால், டூப் வைத்து எடுத்துவிடலாம் என இயக்குனர் முடிவு செய்திருந்தார். ஆனால் ஹன்சிகா ஆர்வக்கோளாறில் நானே குதிரை சவாரி செய்கிறேன் என்று இயக்குனரிடம் கூறினாராம்.

ஆனால் படப்பிடிப்பில் குதிரையில் ஏறும்போது திடீரென குதிரை சிலிர்த்ததால் பயந்துபோன ஹன்சிகா குதிரையில் இருந்து கிழே விழுந்தார். குதிரை ஹன்சிகாவை எட்டி உதைத்ததால், ஹன்சிகாவுக்கு லேசான

காயம் ஏற்பட்டது. உடனடியாக படப்பிடிப்பு நிறுத்தப்பட்டு ஹன்சிகாவுக்கு முதலுதவி செய்தனர். அதன்பின்னர் டூப் வைத்து அந்த காட்சி எடுக்கப்பட்டது.

Leave a Reply