உலக நாயகனுக்கு உலக அறிவும் வேண்டும்: எச்.ராஜா
நடிகர் கமல்ஹாசன் தன்னை உலகநாயகன் என்று சொல்லி கொண்டால் மட்டும் போதாது, அவருக்கு உலக அறிவும் வேண்டும் என்று பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.
திருவாரூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுகுறித்து மேலும் கூறியபோது, ‘உலக நாயகன் என்று சொல்லிக் கொண்டால் மட்டும் போதாது உலக அறிவும் வேண்டும். பாராளுமன்றத்தில் அரசியல் சட்டத்திருத்தம் 11 தெளிவாக சொல்கிறது. குடியுரிமை திருத்த சட்டம் இது என்று.
மேலும் இது முதல் தீர்த்தம் அல்ல, இது ஐந்தாவது சட்டத்திருத்தம். இதற்கு முன்னர் நான்கு முறை திருத்தம் ஏற்பட்டுள்ளது. தில் மூன்று முறை காங்கிரஸ் இருக்கும்போது திருத்தப்பட்டது. அந்த நான்கு முறை திருத்தியபோது பாராளுமன்றத்தில் அதிகாரம் இல்லாமல் தான் திருத்தினார்களா? ஆகவே கமலஹாசன் அவர்களுக்கு பாராளுமன்ற நடவடிக்கையும் தெரியவில்லை சட்டமும் தெரியவில்லை’ என்று கூறினார்
Leave a Reply
You must be logged in to post a comment.