மானமுள்ள இந்துக்கள் தி.மு.க.வை விட்டு ​வெளியேற வேண்டும்: எச்.ராஜா

மானமுள்ள இந்துக்கள் தி.மு.க.வை விட்டு ​வெளியேற வேண்டும் என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார். தமிழகத்தில் அறநிலைய துறை மிக மோசமாக செயல்பட்டு கொண்டிருப்பதாகவும், தமிழக கோவில்களில் இருந்து சிலைகள் மட்டும் மாயமாகவில்லை, கோவில்களே மாயமாகியுள்ளதாகவும் நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய எச்.ராஜா கூறியுள்ளார்.

மேல்லும் தமிழகத்தில் உள்ள கோவில்களின் கணக்கின்படி அவை இல்லை என்றும், கோவில்கள் இருந்த இடத்தில் கர்ப்பகிரகங்கள் இருந்த இடத்தில் தற்போது ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்கள் மற்றும் ஓட்டல்கள் இருப்பதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

ஸ்ரீரங்கம் கோவிலுக்கு சென்ற ஸ்டாலின் பொதுமக்கள் முன்னிலையில் ஐயர் வைத்த பொட்டை அழித்துள்ளார். எனவே திமுகவில் உள்ள இந்துக்கள் மானமுள்ளவர்கள் என்றால் திமுகவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Leave a Reply