கமல், சத்யராஜூக்கு பணம் மட்டுமே முக்கியம். எச்.ராஜா
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா கடந்த சில வருடங்களாகவே சர்ச்சைக்குரிய கருத்துக்களை அவ்வப்போது தெரிவித்து வரும் நிலையில் இன்று பிரபல தொலைக்காட்சியில் பேட்டியளித்த அவர் கமல், மற்றும் சத்யராஜ் குறித்தும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்துள்ளார்.
கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த எச்.ராஜா, ‘சத்யராஜ் கமல்ஹாசன் ஆகியோர்களின் தமிழ்ப்பற்று, தமிழர் உணர்வு மேலோட்டமானது என்றும் இரண்டு பேர்களும் பணத்துக்காக மட்டுமே கவலைப்படுவதாகவும் கூறியுள்ளார்.
எச்.ராஜாவின் இந்த கருத்துக்கு கமல் மற்றும் சத்யராஜ் ரசிகர்கள் ஃபேஸ்புக், டுவிட்டரில் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்ப்பற்று அதிகம் உள்ள கமல், சத்யராஜ் குறித்து எச்.ராஜா இவ்வாறு பேசியது துரதிஷ்டமானது என்று அவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.