நல்ல செய்தி: கொரோனாவில் இருந்து தப்பிய பாடகிக்கு எச்.ராஜா வாழ்த்து

பாலிவுட் பழகிய கனிகா கபூர் சமீபத்தில் லண்டனில் இருந்து திரும்பி வந்த போது விமான நிலையத்தில் கொரோனா வைரஸ் பரிசோதனையில் இருந்து தப்பி வீட்டிற்கு சென்றதாகவும் அதன் பின்னர் அவர் ஒரு விருந்தில் கலந்து கொண்டதாகவும் அந்த விருந்தில் மத்திய அமைச்சர்கள் உள்பட பலர் கலந்து கொண்டதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திடீரென அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

இதனை அடுத்து அவர் வைத்த பார்ட்டியில் கலந்துகொண்ட அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அவருக்கு அடுத்தடுத்து கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் நான்கு முறை பாசிட்டிவ் தான் என்று அடுத்தடுத்து ரிசல்ட்டுகள் வந்தன

இந்த நிலையில் தற்போது ஐந்தாவது முறையாக பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு நெகட்டிவ் என ரிசல்ட் வந்துள்ளதால் அவர் விரைவில் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குச் செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுகுறித்து கருத்து தெரிவித்த பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா அவர்கள் நல்ல செய்தி என்று கூறியுள்ளார்

Leave a Reply