shadow

சாமியார் ராம் ரஹிம் வழக்கின் தீர்ப்பு எதிரொலி: பஞ்சாப் ஹரியானாவில் வன்முறை

பெண் சீடர்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தேரா சச்சா சவுதா அமைப்பை சேர்ந்த குர்மீத் ராம் ரஹிம் என்ற சாமியார் குற்றவாளி என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. ராம் ரஹிமுக்கு தண்டனை விவரங்கள் வரும் 28 ஆம் தேதி அறிவிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ள நிலையில் சாமியாரை தற்காலிக சிறையில் போலீசார் அடைத்துள்ளனர்.

சாமியார் குற்றவாளி என தீர்ப்பு அளிக்கப்பட்டதன் விளைவாக அவருடைய ஆதரவாளர்கள் பஞ்சாப், ஹரியானா ஆகிய இரு மாநிலங்களிலும் வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் போலீசார் மீது கல் வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டதால் வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் கண்ணீர் புகை குண்டு வீச்சு, தடியடி நடத்தினர்.

பஞ்சாபில் ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்குகள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன. சிர்சாவில் கலவரத்தை அடக்க ராணுவம் வரவழைக்கப்பட்டது. வன்முறைகளில் 30 பேர் பலியானதாகவும் 250 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பாக 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இரு மாநிலங்களும் இயல்பு நிலைக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாலும் 28ஆம் தேதி தண்டனை அறிவிக்கப்பட்டால் மீண்டும் வன்முறை வெடிக்கும் என அஞ்சப்படுகிறது.

Leave a Reply