ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டி: மும்பையை வென்றது குஜராத்
ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியின் நேற்றைய போட்டியில் குஜராத் அணி மும்பை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி, மும்பையை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக்கொண்டது. தொடக்க ஆட்டக்காரரும் கேப்டனுமான ரோஹித் சர்மா நான்காவது ஓவரிலேயே 30 ரன்களுக்கு ஆட்டமிழந்தாலும் அதன்பின்னர் களமிறங்கிய ரானாவின் அதிரடி ஆட்டத்தால் மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 172 ரன்கள் குவித்தது. ராணா 70 ரன்களும், பட்லர் 33 ரன்களும் எடுத்தனர்.
173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களமிறங்கிய குஜராத் அணி, 17.5 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்து 173 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் சுரேஷ் ரெய்னா 58 ரன்களும், மெக்கல்லம் 48 ரன்களும் எடுத்தனர். சுரேஷ் ரெய்னா ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
இன்று கொல்கத்தா – ஐதராபாத் அணிகளுக்கு, டெல்லி-பெங்களூர் அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. இந்த வெற்றியின் மூலம் குஜராத் அணி ஃப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave a Reply
You must be logged in to post a comment.