shadow

மான்செஸ்டர் தாக்குதல் எதிரொலி: உலக சுற்றுப்பயணத்தை ரத்து செய்தார் பாப் பாடகி கிராண்டே

கடந்த திங்கள் அன்று இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் நகரில் பாப் பாடகி ஏரியனா கிராண்டே நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்தபோது தீவிரவாதி ஒருவரின் மனிதவெடிகுண்டு தாக்குதலால் 22 பேர் பலியாகினர். மேலும் 50க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவத்தால் பாடகி ஏரியனா கிராண்டே கடும் அதிர்ச்சி அடைந்தார். கடந்த இரண்டு நாட்களாகவே அவர் தான் தங்கியிருந்த அறையை விட்டு வெளியே வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் மான்செஸ்டர் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஜூன் 5-ம் தேதிவரை தனது உலக சுற்றுப்பயணத்தை ரத்து செய்துள்ளார் பாடகி கிராண்ட்.

23 வயதான பாடகி கிராண்டே லண்டனின் ஓ2 அரங்கத்தில் நடத்த இருந்த இரண்டு இசை நிகழ்ச்சிகள், சுவிட்சர்லாந்தில் ஜூன் 5-ம் தேதி நடத்தவிருந்த இசை நிகழ்ச்சி உள்ளிட்ட அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துள்ளார்.

Leave a Reply