shadow

ஓபிஎஸ் அவர்களுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுக்க கவர்னர் முடிவு?

தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது பதவியை கட்டாயத்தின்பேரில் ராஜினாமா செய்ததாக கூறப்பட்ட நிலையில் மக்கள் விரும்பினால் ராஜினாமாவை வாபஸ் பெறுவேன் என்று கூறினார். இந்நிலையில் நேற்று மாலை 5 மணிக்கு கவர்னரை சந்தித்து பேசிய முதல்வர் ஓபிஎஸ் மீண்டும் தனக்கு வாய்ப்பு அளிக்குமாறு கூறியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓபிஎஸ் அவர்களுக்கு இன்று அழைப்பு விடுக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஓபிஎஸ் அவர்களுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த ஒரு வாய்ப்பு கொடுக்க ஆளுனர் முடிவு செய்துள்ளதாகவும், ஒருவேளை சட்டமன்றத்தில் பன்னீர்செல்வம் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும் பட்சத்தில், சசிகலாவை முதல்வர் பதவி ஏற்க ஆளுநர் அழைப்பார் என்றும், கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு கவர்னர் மாளிகையில் இருந்து இன்று வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply