shadow

ஆளுனரிடம் இருந்து அழைப்பு. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு உற்சாகம்

ஆட்சி அமைக்க யாரை அழைப்பார் என அதிமுகவினர் மட்டுமின்றி தமிழக மக்களே எதிர்பார்த்திருக்கும் நிலையில் சற்றுமுன்னர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆளுனர் சற்றுமுன்னர் அழைப்பு விடுத்துள்ளார்.

இன்று காலை தன்னை வந்து சந்திக்கும்படி ஆளுனர் வித்யாசாகர் ராவ் எடப்பாடி பழனிச்சாமிக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பை ஏற்று எடப்பாடி பழனிச்சாமி உள்பட ஐந்து அமைச்சர்கள் தற்போது கூவத்தூரில் இருந்து ஆளுனர் மாளிகையை நோக்கி விரைந்துள்ளனர்.

இந்த அழைப்பு ஆட்சி அமைக்கவா? அல்லது மீண்டும் அவருடன் கவர்னர் ஆலோசனை செய்வதற்கா? என்று தெரியாத நிலையில் சசிகலா ஆதரவு அதிமுகவினர் இந்த அழைப்பு காரணமாக பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

Leave a Reply