தனியார் கல்லூரிகளில் பயின்று வரும் செவிலியர்கள் அரசு மருத்துவமனைகளில் பணியமர்த்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த 5 நாட்களாக அரசு செவிலியர் பயிற்சிக் கல்லூரி மாணவிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இன்று காலை சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மாணவிகள் 300 பேர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் கஸ்தூரிபா தாய் சேய் நல மருத்துவமனை பயிற்சிப் பள்ளி செவிலியர் மாணவிகள் 200 பேர்களும் அவர்களுடன் சேர்ந்து சாலை மறியல் செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் மறியல் செய்த அனைவரும் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில், இன்று அரசு செவிலியர் மாணவிகளுடன் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நடத்திய பேச்சு நடத்தினர்.
பேச்சுவார்த்தையில் மாணவிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர் விஜயபாஸ்கர் உறுதி அளித்தார். அவருடைய உறுதியை ஏற்றுகொண்ட மாணவிகள் தங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.