shadow

அரசு வேலை என்றால் நாய்க்கு பிஸ்கட் போடுவது போன்றதா? மத்திய அமைச்சரின் சர்ச்சை பேச்சு

ஈராக்கில் தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட 39 இந்தியர்களின் குடும்பத்தினர்களுக்கு அரசு வேலை கொடுப்பது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மத்திய அமைச்சர் விகே சிங், அரசு வேலை என்றால் நாய்க்கு பிஸ்கட் போடுவது போன்றதா? என்று கோபத்துடன் சர்ச்சைக்குரிய பதிலை கூறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஈராக்கில் சுட்டு கொல்லப்பட்ட 38 இந்தியர்களின் உடல் நேற்று இந்தியா வந்தடைந்தது. உடல்கள் அவரவர்களின் உறவினர்களிடம் முறைப்படி ஒப்படைக்கப்பட்ட நிலையில் நேற்று செய்தியாளர்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர் விகே சிங் பேட்டி அளித்தார். அப்போது அவரிடம் 38 இந்தியர்களின் உறவினர்களுக்கு அரசு வேலை வழங்கப்படுமா? என்ற கேள்வியை செய்தியாளர் ஒருவர் எழுப்பினர்.
அதற்கு பதில் கூறிய அமைச்சர், “இது கால்பந்து விளையாட்டு அல்ல. மத்திய, மாநிலத்திலும் உள்ள அரசுகள் மிகவும் சென்சிடிவான அரசாங்கங்கள். யாருக்கெல்லாம் வேலை வழங்க வாய்ப்புள்ளதோ அது குறித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களிடம் விவரங்களை வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. விவரங்கள் கிடைத்தவுடன் அது குறித்து பரிசீலிக்கப்படும்” என்று கூறினார்.

மேலும், “இது நாய்களுக்கு பிஸ்கட் போடும் வேலை அல்ல. இது மக்களின் வாழ்க்கை பற்றியது. தற்போது எப்படி என்னால் அறிவிப்பை வெளியிட முடியும்? உங்களுக்கு புரிகிறதா” கோபத்துடன் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது

Leave a Reply