நான் கிசுகிசுக்கள் மீது பெரிதாக கவனம் செலுத்துவதில்லை: அமலாபால்
நடிகை அமலாபால் கோலிவுட் திரையுலகில் பிசியாக இருக்கும் ஒரு நடிகை. அதுமட்டுமின்றி அவ்வப்போது சர்ச்சைகளிலும் சிக்குபவர். இளம் வயதிலேயே திருமணம் செய்து விரைவில் விவாகரத்தும் பெற்ற நடிகை அமலாபால் மீதான கிசுகிசுக்களுக்கு பஞ்சமே இல்லை. இந்த கிசுகிசுக்களை அவர் எப்படி எடுத்து கொள்கிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது:
நம்மை பற்றி கிசுகிசுக்கள் வருவது நல்லதுதான். பொதுவாக இரண்டு விதமாக கிசுகிசுக்கள் வரும். ஒன்று நாம் தவறான பாதையில் சென்று கொண்டிருக்கிறோம் என கூறுவார்கள். மற்றொன்று நாம் சரியான பாதையில் செல்கிறோம் என சொல்வார்கள். இப்போது நல்ல பாதையில் போவதாக தான் கிசுகிசுக்கள் வருகின்றன.
அதனால் அதை மாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. அதே நேரத்தில் நாம் செய்வது தவறு என கூறும் போது, அது உண்மையாக இருக்கும் பட்சத்தில், என் தவறை நான் திருத்திக்கொள்வேன். சும்மா வேடிக்கையாக வரும் கிசுகிசுக்களை நானும் அப்படியே எடுத்துக்கொள்வேன்’
இவ்வாறு அவர் கிசுகிசுக்கள் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
Leave a Reply
You must be logged in to post a comment.