shadow

பிரதமர் அறிவிப்பால் நகைக்கடைகளில் குவிந்த கூட்டம்

jewelleryரூ.500, ரூ.1000 வாபஸ் பெறுவதாக நேற்று பிரதமர் மோடி அறிவித்ததை அடுத்து ஏராளமானோர் தங்களிடம் இருந்த ரூ.500, ரூ.1000 பணத்தை மாற்ற நேற்று இரவு முதல் முயன்று வருகின்றனர். பலரும் ரூ,.100 நோட்டுக்களுக்காக ஏடிஎம் முன் குவிந்தனர்.

இந்நிலையில் நகைக்கடைகளில் இருக்கும் பணத்திற்கு கணக்கு காட்ட ஒரு வாரம் வரை அவகாசம் இருப்பதால் சென்னையில் உள்ள அனைத்து நகைக்கடைகளில் ரூ.500, ரூ.1000 பெறப்பட்டது,.

இதனால் நேற்று சென்னை தி.நகர், மயிலாப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள நகைக்கடைகளில் விடிய விடிய வியாபாரம் நடைபெற்றது.

Leave a Reply