shadow

தங்கம் மற்றும் வீட்டுமனை விலை குறையும். எச்.ராஜா

complaint against H.Rajaபிரதமர் மோடி எடுத்திருக்கும் கருப்பு பண ஒழிப்பு நடவடிக்கை காரணமாக மிக விரைவில் தங்கம் மற்றும் வீட்டு மனைகளின் விலை குறையும் என பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கூறியுள்ளார்.

இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:

500, 1000ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால் இன்று திருமண மண்டபங்களின் வாடகை கட்டணம் மற்றும் பல்வேறு பொருட்களின் விலை குறைந்துள்ளது. ஜனவரி மாதத்திற்குள் வீட்டு மனை மற்றும் தங்கத்தின் விலை குறையும்.

பழைய செல்லாத ரூபாய் நோட்டுக்களை மாற்ற வங்கிகள் முன்பு ஏழை மக்கள் நிற்பது மத்திய அரசுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. இதற்கு காரணம் அவர்கள் தங்கள் சொந்த பணத்தை மாற்ற வருகின்றனர். மத்திய அரசு நடவடிக்கையினால் கள்ளப்பணம், கருப்பு பணம் பயங்கரவாதிகளின் பணம் ஒரே நாளில் ஒழிக்கப்பட்டு விட்டது.

தங்கம் மற்றும் வீட்டுமனைகளை கருப்புப்பணம் வைத்திருந்தவர்கள் அதிகம் வாங்கியதால் அதன் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே சென்றது. இனி உண்மையாகவே உழைத்து சம்பாதிப்பவர்கள் மட்டுமே தங்கம் மற்றும் வீட்டு மனைகளை வாங்குவார்கள் என்றும் அதனால் இவைகளின் விலை குறைய வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply