நாஞ்சில் சம்பத் நீக்கத்தை அடுத்து அதிமுகவில் அடுத்த அதிரடி
கடந்த சில தினங்களுக்கு முன்னர் அதிமுகவின் துணை கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் மனோகரன் அதிரடியாக அந்த பதவியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் அதிமுகவில் சில அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது. அதிமுக மகளிரணி செயலாளராக அமைச்சர் கோகுல இந்திராவை நியமித்துள்ளார் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா. முன்னதாக அதிமுக அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து அவரை ஜெயலலிதா விடுவித்துள்ளார்.
ஏற்கனவே அப்பதவியில் இருந்த மக்களவை எம்.பி சசிகலா புஷ்பாவை அப்பதவியிலிருந்து அதிரடியாக விடுவிக்கப்பட்டுள்ளார். கோகுல இந்திராவுக்கு மாற்று பதவியளித்துள்ள ஜெயலலிதா, சசிகலா புஷ்பாவை காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சியின் துணை கொள்கை பரப்பு செயலாளர் பதவியிலிருந்து நாஞ்சில் சம்பத் விடுவிக்கப்பட்டு கட்சியின் முக்கிய பதவிகளில் ஒன்றான அப்பதவி இன்னும் நிரப்பப்படவில்லை. இந்நிலையில் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது பலவித யுகங்களுக்கு வழிவிட்டிருக்கிறது.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இன்னும் ஒருசில அதிரடி மாற்றங்கள் அதிமுகவில் நிகழும் என்பதால் கட்சியினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Chennai Today News: Gokula Indira get new post in ADMK
Leave a Reply
You must be logged in to post a comment.