shadow

1aa

மகள் ஃபேஸ்புக் பயன்படுத்துவதை தாய் கண்டித்ததால், மனமுடைந்த 13 வயது சிறுமி தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். இந்த அதிர்ச்சி சம்பவம் இந்தியாவில் நடந்துள்ளது.

ஆதித்தி குப்தா என்ற 13 வயது சிறுமி பள்ளிக்கு செல்லும் நேரம் தவிர மீதியுள்ள நேரங்களில் தனது லேப்டாப்பில் ஃபேஸ்புக்கில்தான் நேரத்தை செலவிடுவார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது தாய் மோகனா, மகளின் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை கேன்சல் செய்தார். இதனால் மனமுடைந்த சிறுமி மிகவும் வருத்ததுடன் காணப்பட்டார்.

பின்னர் ஆதித்தியின் தாயார் நான்கு மணி நேரம் கழித்து திரும்பி வந்த பார்த்தபோது, தனது மகள் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீஸுக்கு தகவல் கொடுத்த மோகனா, நடந்ததை கூறி கதறி அழுதார்.

தனது மகள் ஃபேஸ்புக்கில் ஒரு நாளைக்கு பலமணி நேரங்கள் செலவிடுவதை கண்டித்துதான் ஃபேஸ்புக் அக்கவுண்ட்டை கேன்சல் செய்ததாகவும், அதுவே அவருடைய உயிரை போக்க காரணமாக இருந்துவிட்டதாகவும், மோகனா போலீஸில் கதறியபடி வாக்குமூலம் கொடுத்தார்.

மரணம் அடைந்த சிறுமியின் குடும்பத்தினர்களும் கேட்டுக்கொண்டதற்கிணங்க காவல்துறையினர் இந்த சம்பவம் நடந்த இடத்தை குறிப்பிடவேண்டாம் என ஊடகங்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Leave a Reply