shadow

harrisஅஜீத், அனுஷ்கா, த்ரிஷா, நடிப்பில் வரும் 5ஆம் தேதி வெளிவரவுள்ள ‘என்னை அறிந்தால்’ படம் மிகப்பிரமாண்டமாக உலகம் முழுவதும் வெளிவரவுள்ள நிலையில் படத்தின் பின்னணி இசை சேர்ப்பு பணிகளை ஹாரிஸ் ஜெயராஜ் தூக்கமின்றியும், ஓய்வின்றியும் வேலை செய்ததாக தற்போது தகவல்கள் வெளிவந்துள்ளது.

படத்தின் பின்னணி இசை முடித்த நாளில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ள ஹாரீஸ் ஜெயராஜ், ‘என்னை அறிந்தால்’ பட வேலையை ஓய்வின்றி முடித்தவுடன் நிம்மதியாக நாற்காலியில் உட்கார்ந்தபடி நானும், இயக்குனர் கவுதம் மேனன் தரையிலும் படுத்து தூங்கினோம் என்று டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில் ‘என்னை அறிந்தால்’ படத்தின் ரிசர்வேஷன் தொடங்கிய சில நிமிடங்களில் சென்னை உள்பட அனைத்து முக்கிய நகரங்களிலும் முதல் நான்கு நாட்களுக்கு டிக்கெட் விற்று தீர்ந்துவிட்டதாக கூறப்படுகிறது. முன் எப்போதும் இல்லாத அளவில் ‘தல’ அஜீத் நடித்த இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பல மடங்கு எகிறியுள்ளதாக கூறப்படுகிறது.

Leave a Reply