shadow

samantha-and-gauthamகவுதம் மேனன் இயக்கத்தில்  நடித்த அனுபவங்கள் குறித்து நடிகை சமந்தா சமீபத்தில் அளித்த ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

மற்ற இயக்குனர்கள் அனைவரும் படப்பிடிப்பில் மட்டுமே காட்சிகள் குறித்தும் நடிப்பு குறித்தும் பேசுவார்கள். ஆனால் கவுதம் மேனனிடம் படப்பிடிப்பு தளத்தில் நான் ஒன்றுமே கற்றுக்கொள்ளவில்லை. அவருடன் இருக்கும் ஒவ்வொரு நிமிடமும் ஏதாவது ஒரு விஷயத்தை கற்றுக்கொண்டே இருப்பேன். சாதாரண ஓய்வு நேரங்களில்கூட அவரிடம் இருந்து வெளிவரும் ஒவ்வொரு வார்த்தையிலும் ஒரு அர்த்தம் இருக்கும்.

அவருடைய படத்தில் நடிக்கும்போது கேமிரா முன்னாள் நிற்பது போன்றே ஒரு உணர்வே இருக்காது. சாதாரணமாக அவருடன் பேசிக்கொண்டிருப்பதுபோல் இருக்கும். மிகவும் இயல்பான இயக்குனர் அவர். ‘நீதானே என் பொன்வசந்தம் படத்தில் நடிக்கும்போது ஒவ்வொரு நிமிடமும் இதை நான் உணர்ந்தேன்” என்று கூறியுள்ளார்.

தற்போது விஜய்யூடன் கத்தி, மற்றும் சூர்யாவுடன் அஞ்சான் படத்தில் நடித்து வரும் சமந்தா, தற்போது கவுதம் மேனன் இயக்கிவரும் அஜீத்தின் படத்தில் த்ரிஷாவின் வேடத்தை தனக்கு கொடுக்க அவர் விரும்பியதாகவும் ஆனால் அவர் கேட்ட தேதியை தன்னால் கொடுக்க முடியாததால் அந்த படத்தை தான் மிஸ் செய்ததாகவும் கூறினார்.

Leave a Reply