shadow

கள்ளநோட்டு விவகாரம். பர்மா காவல்துறையிடம் சிக்கிய ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழு
rangoon100
ஏ.ஆர்.முருகதாஸ் நிறுவனம் தயாரிக்கும் படத்தின் படக்குழுவினர் பர்மா போலீசாரால் திடீரென விசாரணை செய்யப்பட்டதால் கோலிவுட் திரையுலகில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் திரைப்படம் ‘ரங்கூன்’. இந்த படத்தின் ஒருசில காட்சிகளை பர்மாவில் படமாக்க முடிவு செய்து படக்குழு சமீபத்தில் பர்மா சென்றது. ரங்கூன் விமான நிலையத்தில் படக்குழுவினர்களை சோதனை செய்த அதிகாரிகள் படக்குழுவினர்களில் ஒருவரிடம் பர்மா நாட்டின் போலி கரன்ஸிகள் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து படக்குழுவினர் அனைவரையும் விசாரணை செய்தபோது, அந்த போலி கரன்சிகள் அனைத்தும் படப்பிடிப்பிற்காக அச்சிடப்பட்டவை என தெரியவந்தது,

அதன்பின்னரே படக்குழுவினர்களை எச்சரிக்கை செய்து பர்மா காவல்துறையினர் விடுதலை செய்தனர். இதன் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான ‘ரங்கூன்’ படக்குழுவினர் தற்போது பர்மா படப்பிடிப்பை கேன்சல் செய்துவிட்டு பாங்காக்கில் படப்பிடிப்பு நடத்தி வருகின்றனர்.

கெளதம் கார்த்தி, சனா, பிரசாந்த் நாயர் மற்றும் பலர் நடித்து வரும் இந்த படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார். விக்ரம் இசையமைக்கும் இந்த படத்திற்கு அனிஷ் தருண்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். பிரசன்னா இந்த படத்தை எடிட்டிங் செய்கிறார்.

Leave a Reply