shadow

mahabalipuram5

பிரம்மோற்சவத்தின் மூன்றாம் நாளில், பூவராக சுவாமி, கருட வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பொதட்டூர்பேட்டை அடுத்த, மேல் பொதட்டூர் கிராமத்தில், ஸ்ரீதேவி, பூதேவி உடனுறை பூவராக சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலின் பிரம்மோற்சவம், கடந்த வியாழக்கிழமை காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம், மாலை, 4:00 மணிக்கு, கருட வானகத்தில் சுவாமி வீதியுலா எழுந்தருளினார். பொதட்டூர்பேட்டை, மேல்பொதட்டூர், கோணசமுத்திரம், புதுார், வாணிவிலாசபுரம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமியை தரிசனம் செய்தனர். நேற்று மாலை, அனுமந்த வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று காலை, சக்கர ஸ்தானத்துடன் பிரம்மோற்சவ திருவிழா நிறைவு பெறுகிறது.

Leave a Reply