shadow

gana balaபாடல் வரிகள் குறித்து இயக்குனர் பேரரசு மற்றும் கானா பாலா ஆகிய இருவருக்கும் இடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதால் கோலிவுட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஆண்களை ஏமாற்றும் பெண்களை கடுமையான வார்த்தைகளால் கானா பாலா தனது பாடல்களில் விமர்சித்து வருவதாகவும், இதை இனிமேலும் பொறுத்து கொள்ள முடியாது என்றும் அவர் ஒரு விழாவில் கூறியுள்ளார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு சினிமா விழாவில் பேரரசு பேசியதாவது:  “கானா பாலாவின் பாடல்கள் பெண்களை அவமதிக்கும் விதத்திலேயே உள்ளன. காதலித்து ஏமாற்றுபவர்கள் பெண்கள்தான். கணவன்மார்களை பெண்கள் ஏமாற்றுகிறார்கள். குடும்ப பெண்களும் கணவனுக்கு மோசம் செய்கிறார்கள் என்பதுபோல் பாடல்களை எழுதி பெண் குலத்தை கானா பாலா வசை பாடி வருகிறார். இனிமேல் இது மாதிரி பாட்டு எழுதுவதை பொறுத்து கொள்ள முடியாது. கானா பாலா மேல் பெண்கள் கடும் கோபத்தில் இருக்கிறார்கள். இனிமேல் இதுபோல் அவர் பாடக்கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதற்கு பதில் அளித்து கானா பாலா கூறும்போது, ‘‘டைரக்டர்கள்தான் அதுபோன்ற பாடல்களை எழுதும்படி என்னை நிர்ப்பந்திக்கிறார்கள். மற்றபடி பெண்கள் மேல் நான் நிறைய மதிப்பு வைத்து இருக்கிறேன்’’ என்றார். வேறு யாராவது இதை கூறியிருந்தால் பரவாயில்லை. தனது பாடல் வரிகளில் இரட்டை அர்த்த வரிகளை அள்ளித் தெளிக்கும் இவர் அடுத்தவரை குறை கூறுவதா என கோலிவுட் வட்டாரங்கள் தற்போது ஒரு பக்கம் கிசு கிசுக்கத் துவங்கியுள்ளது.

Leave a Reply